எழுதிய கவிதைகளோ நூறை தாண்டாது….
ஆனால், உன் பெயரை எழுதினேன் ஒவ்வொரு முறையும் எண்ணாது…..
என் இதயம் என் உடலெங்கும் குருதியை அனுப்பும் முன்,
நுரையீரல் தரும் உயிர்வளியை கலக்கிறதோ இல்லையோ,
உன் நினைவுகள் தரும் காதலை கலந்து விடுகிறது……
நீ கண்ணீரோடு அன்று விடைபெற்றதாலோ என்னவோ,
நான் இன்று கண்ணீர் கொள்கிறேன் உன்னை நினைத்து……
நம்மை பிரிக்க முடியாதபடி இணைக்கத்தான்
இப்போது இந்த தனிமை என்றால் தாங்கிக் கொள்கிறேன் இதை….
தூரம் பிரித்திருக்கலாம், ‘ஒளி அளவளாவல்’ இணைத்திருக்கலாம் நம்மை…..
விக்கல்கள் வராமலிருந்திருக்கலாம், குறுஞ்செய்திகள் வந்துகொண்டுத்தான் இருக்கிறது…
கனவுகள் வராமலிருக்கலாம், கனத்த மின்னஞ்சல்கள் வந்து கொண்டுத்தான் இருக்கின்றன…
காதலும் தன்னை புதுப்பித்து கொண்டுத்தான் இருக்கின்றது…..
பரிணாம வளர்ச்சியின் ‘தக்கனபிழைத்தல்’ காதலுக்கும் பொருந்தும்….
Tags: kadhal, Tamil-Poem, காதல்-கவிதை, தமிழ்-கவிதை, கவிதை, a-true-love-kathal-kavithai-kavithai-love-tamil-kavitha, tamil kathal kavithai, kadhal-kavithai, $-Siru-kavithai-%-A-True-Love-Kathal-Kavithai-Kavithai-













