கண்கள் இமைக்க மறுத்தது…
நினைவுகள் மறக்க முடியாதவையானது…
தவிப்புகள் தவிர்க்க இயலாததானது….
கரங்கள் பிரிக்க முடியாதவையானது….
காதல் அத்தியாவசியமானது….
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ….
நீண்ட நாட்களாக நெருங்கிய நம் நட்பில்
காதல் என்ற துரு ஏறுமோ? இல்லை
நட்பு தான் சற்று இடைவேளை கேட்குமோ?
எல்லாமே தன்னிலை மாறும்,
ஆனால், நீ என்றுமே நட்பாகவே
எனக்கு போதும் என்பவள் நீ…
நாம் நண்பர்களாகவே தொடர்ந்த போதும்,
காதல் தானே நம்மை தொடர்ந்தது…..
காதல் நம் வசப்படாத நிலையிலும் நாம் காதலின்
வாசலில் தானே காத்து இருந்தோம்!!!!!!!!
மனிதன் பரிணமித்து தான் வந்தான் என்றால்,
நம் காதலும், நட்பின் பரிணாமமே!!!!!
என்று ஓரிரு காரணங்களுடன் நான்
இத்தனை நாட்களாய், அருவமாயிருந்த என் காதலியை,
உருவமுற்ற என் தோழியான உன்னிடத்தில் பார்க்கிறேன்
அதில் தவறேதும் இல்லையே!!!!!!!!
தவேறதும் இருந்தால் சொல்,
மாற்றி கொள்கிறேன் என் காதலை, காதலியை அல்ல……
Tags: kadhal, Tamil-Poem, காதல்-கவிதை, தமிழ்-கவிதை, கவிதை, காதல், siru-kavithai, love-poem, a-true-love-kathal-kavithai-kavithai-love-tamil-kavitha, kadhal-kavithai, $-Siru-kavithai-%-A-True-Love-Kathal-Kavithai-Kavithai-

