யதார்த்தத்தின் நிழலில் இளைப்பாறி கொண்டிருந்த என்னை,
உன் கனவுகளை நோக்கி ஓட சொல்கிறாய்…….
சிறகுகளும் தருகிறாய் நான் கேட்காமலே….
பிடுங்கியும் கொள்கிறாய் என்னை கேட்காமலே….
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்தாய்….
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசிக்கிறாய்…
உன்னை பார்த்தவுடன் தோன்றுவது,
கவிதை… உனக்கு பிடித்தது
நீ பிரியும் போது தோன்றுவது,
காதல்… எனக்கு பிடித்தது
நீ என்னிடம் கொண்டது வெறும் நட்பாயினுமே,
நான் ஒரு நட்பு போர்வை போர்த்திய காதலன் தான்….
Leave a comment