CTRL+Cயும் CTRL+Vயும் என் கவிதைகளும்….
இப்படி தான் தலைப்பு வைக்கனும்னு நினைச்சேன் ஆனா கவர்ச்சியா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்…
சில நாட்கள் வலைக்குள் வராமல் இருந்தால் நிறைய நடந்து விடுகிறது….
என் கவிதைகளையும் சிலர் சுட்டு தங்கள் கவிதைகள் என்று தங்கள் வலைப்பதிவில் போட்டு கொள்கின்றனர்… சிலர் இது இங்கிருந்து தான் சுடப்பட்டது என்று என் வலை முகவரியை அளித்திருக்கின்றனர் (இது பரவாயில்லை)! எனக்கே ஆச்சர்யம் தான்! இருந்தாலும் பாருங்க இது உண்மை…
சில கவிதைகளை சட்டென்று எழுதி முடித்திருப்பேன்… சில கவிதைகளை நன்கு யோசித்து மீண்டும் மீண்டும் எழுதி மெருகேற்றி இருப்பேன்…. சில கவிதைகள் எங்கயோ படித்த அல்லது கேட்ட சில வரிகளின் தாக்கத்தில் இருக்கும்… எந்த படைப்பையும் அப்படியே நகல் எடுக்காமல், அந்த படைப்பின் சாராம்சத்தை எடுத்து நாமும் அதே சிந்தனையில் யோசித்தால், அசலை விட நல்லதாகவே இருக்கும்.
ஆனால் நான் பெண்பால் சொற்களை பயன்படுத்திய இடத்தில் ஆண்பால் சொற்கள் போடுவது, இப்படிஎல்லாம் யோசித்தால்? முடியல…. சில ரிஸ், யுவ, தேவ இசையமைப்பாளர்கள் தாளத்தை (டெம்போ) சுடுவது போல….
அநேகமாக நேரமின்மை காரணமாக என் கவிதைகளை சுட்டனரா? இல்லை, இது நன்றாக உள்ளது என்று சுட்டனரா? இல்லை, இது போல் நம்மால் எழுத முடியாது என்று சுட்டனரா? (இதுவாக இருக்க முடியாது, சில பேர் பெரிய வலைபதிவர்கள், என்னை விட)…
எனது ஆராய்ச்சிகள் கீழ்க்கண்டவாறு ! எதை பற்றி எழுதுவது என்று சிலர் அறை போட்டு யோசித்து எழுதுகின்றனர்… எது எல்லாம் சூடான செய்திகளோ சிலர் அதை பற்றி அவர்களது கோணத்தில் எழுதுகின்றனர்.. சிலர் எவையெல்லாம் வம்பான, அடுத்தவர்களை புண்படுத்தும் கட்டுரைகளோ அதை எழுதுகின்றனர்… சிலர் இலக்கியம், புத்தக விமர்சனம், திரைப்பட விமர்சனம் மற்றும் அரசியல் விமர்சனம் எழுதுகின்றனர்… ஆனால் பெரும்பான்மையானோர் கவிதைகளே எழுதுகின்றனர்….
ஏன்? நாமளும் எழுத ஆரம்பிப்போம் கூடிய சீக்கிரம்!!!!!!
நான் சில கொள்கைகளை வைத்திருக்கிறேன் அதாவது அடுத்தவர்களின் படைப்பை சுடக் கூடாது…
இன்னும் நிறைய இருக்கிறது இபோதைக்கு இது மட்டும்…. http://yezhuththu.com/user/index.php?st=80&user=Geeths http://yezhuththu.com/kavithai/88.html http://vaasamillamalar.blogspot.com/2010/01/blog-post_20.html http://gnanaseelan.blogspot.com/2009/06/blog-post_5354.html இதான் ஹைலைட்டு…. http://seshupri.blogspot.com/2009_11_01_archive.html http://thaniyapaul.blogspot.com/2009_07_01_archive.html