முதல் முறை இல்லையெனினும் அப்புறமாக
வந்து ஒட்டி கொண்டது தான் காமம்…
என் காதல் எப்போதுமே சிறிது காமம் கலந்தே
ஈயப்படுகிறது, உனக்கும் பிடித்திருந்ததால்….
காலங்களை கடத்தி சென்றது உன் காதல்,
காதலை கடத்தி சென்றது என் காமம்….
கண்ணுக்கு தெரியாத சிறு சிறு காம துகள்கள் கலந்த
காதலைத் தான் நாம் சுவாசித்தும், குடித்தும், கடந்தும் வந்தோம்…..
கடந்து வந்த சிலர் காமத்துடன் மறைந்து போயும், சிலர்
காதலுடன் கரைந்து போயும் இருந்தனர்…..
கடைசி வரை, காதல் வழி பிறழாதவர்கள் தாம் வரம் பெற்று வந்தவர்கள்….